பகுத்தறிவு கொண்டே "பரம்" உணர முடியும் ! தன்னை உணரும் நிலையே ஆன்மீகம் !!

ஆன்மீகம் உணர்ந்தவனே நாத்திகன் !!!

"பக்தி" என்பது, புதிருக்கான ஆரம்ப விடையே ! முதல் படி என்று கூறப்படும், கீழான நிலையே !

மனிதனின் வரையறுக்கப்பட்ட அறிவு, (Limited Knowledge)மூலம், எழும் கேள்விகளுக்கு ஒரு தற்காலிக விடை தான் "கடவுள்" என்ற "கற்பனை" !!

சித்தம்சீர்தூக்கி உள்மனம் உணர்ந்து
வாலறிவு கொண்டு சிந்தனை செய்து
அடுத்து அடுத்து படியேறி, மேலே போவதே ஞானம் !!! மாமனிதர்களின் போதனைகள், மறைநூல்கள் துணை கொண்டு சிந்தனையை உயர்தலே ஞானம் !

ஆழ்ந்த சித்தம் சீர்தூக்கிய வாலறிவில் எல்லையில்லா இந்த அண்ட வெளி ஒன்றும் இல்லாத வெற்றிடமல்ல !

பரம் என்ற தற்சுழற்சி விசை !

எல்லாமான நுண்ணிய நிலையற்ற எங்கும் நிரம்பிய ஏகவிசையே "பரம்" என்ற ஏகம் ! இந்த ஏகம்பர விசையே (Eternal Basic Energy) தமிழர்களின் சித்தம் உணர்ந்த ஆதிமூலம் !

இந்த பரம்மூல(Formula) ஈர்ப்பு மூலம் உருவானதே, உயிர்(living) உயிரற்ற (nonliving)பொருள்கள்(Mass) எல்லாம்!

ஆதித்தமிழன் கண்டுணர்ந்த இந்த வாலறிவே (Hypothetical Truth) "பரம்" ! வாவறிவன் என்ற "கற்பனை கடவுள்"
"ஆதிமூலம் என்ற இறை" !

(கடவுள், அல்லா, ஏலி, கர்த்தா, பிரம்மா, சக்தி, சிவன், ஈசன், விஷ்ணு, பிதா, மால், திருமால், பெருமாள், மாயன் முருகன் காளி, கருப்பு, GOD, ALMIGHTY, etc. etc.)

மற்றபடி, இந்த ஏக பரம்மூல ஆதார விசைக்கு உருவம் கொடுத்து, பூஜை, வழிபாடு, தொழுகை, ஆராதனை, செபக்கூட்டம், என்ற நிகழ்ச்சிகளை நடத்துவது எல்லாம், மனிதனின் "அறியாமை" தான் !

ஆரவார வழிபாடு, சிலை அலங்காரம், போடும் அடையாளம், கொண்டாட்டம் எல்லாம் "வாலறிவனை", தவறான முறையில் சித்தரிக்கும் மூடப்பழக்கமே, பாமரமக்களை ஏமாற்றி, சில கயவர்கள், சோம்பேறி சுகவாழ்வு சுகிப்பதே ! 

Comments

Popular posts from this blog